ஆய்வுக்கு போபால் செல்லும் இறந்த கோழியின் ‘சாம்பிள்’

Palladam : வெங்கிட்டாபுரத்தில் மர்ம நோயால் 7,000 முட்டைக்கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து, இறந்த கோழி ‘சாம்பிளை’ கால்நடை பராமரிப்புத்துறையினர் சேகரித்து, போபால் ஆய்வு கூடத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர்.பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் ஆயிமுத்து(47) என்பவர், முட்டைக்கோழி பண்ணை நடத்துகிறார்.

Hens

Hens

இவரது பண்ணையில் 12 ஆயிரம் முட்டைக்கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. அதில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7,000 கோழிகள் மர்மநோய் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்தன. மேலும், நூற்றுக்கணக்கான கோழிகள் இறக்கும் நிலையில் உள்ளன.கோவை, திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை உயரதிகாரிகள், பண்ணையை பார்வையிட்டனர். கோழிகள் எந்த நோய் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்தன என கண்டறியும் வகையில், இறந்த கோழிகளின் மாதிரியை சேகரித்தனர்.


அவற்றை போபாலில் உள்ள கோழிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்ப எடுத்துச் சென்றனர்.இதேபோல், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இருந்து வந்த பேராசிரியர் தலைமையிலான குழுவினரும் இறந்த கோழிகளின் சாம்பிள் சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வுக்கூடங்களில் இருந்து பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, கோழிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

Tags: , , , , , , ,

Category: Tirupur News, palladam, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply