திருப்பூரில் நம்ம திருப்பூர்-கூடல் 2010
திருப்பூர்: தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, புராதனங்களை வெளிப்படுத்தும் ‘நம்ம திருப்பூர்-கூடல் 2010′ கலை பண்பாட்டு திருவிழா நிகழ்ச்சி இன்று துவங்குகின்றது.

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, புராதனங்களை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் மையம் சார்பில் , நம்ம திருப்பூர்-கூடல் 2010′ கலை பண்பாட்டு திருவிழா நிகழ்ச்சி இன்று முதல் துவங்க உள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு நாட்டுப் புறப்போட்டிகள், சிலம்பாட்ட இறுதிச் சுற்று நடைபெறும். 4.30 மணிக்கு உணவு அரங்கு திறக்கப்படுகிறது. 5 மணிக்கு சிக்கண்ணா கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள தமிழ் மையம் கலையரங்கை திமுக ராஜ்யசபா உறுப்பினர் கவிஞர் கனிமொழி திறந்து வைக்கிறார். 6 மணிக்கு நம்ம ஈரோடு தொடக்க விழா நடைபெறும்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சமயமூர்த்தி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், தங்கம் தென்னரசு, திருப்பூர் மேயர் செல்வராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நம்ம திருப்பூர் நிகழ்ச்சி வரும் 7 ம் தேதி வரை திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரங்கள், முக்கியத்துவங்களை விளக்கும் வகையில் இங்கு நிகழ்ச்சிகள் இருக்கும்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து அதே பாணியில் திருப்பூரிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

“சங்கே முழங்கு’ என்ற தலைப்பில், “டிரம்ஸ்’ சிவமணி

“சங்கே முழங்கு’ என்ற தலைப்பில், “டிரம்ஸ்’ சிவமணி

“சங்கே முழங்கு’ என்ற தலைப்பில், “டிரம்ஸ்’ சிவமணி

திருப்பூர் மேயர் செல்வராஜ், இயக்குநர் வசந்து மற்றும் போக்குவரத்து துரை அமைச்சர் சாமிநாதன்.

போக்குவரத்து துரை அமைச்சர் “சாமிநாதன்”

“இயக்குநர் வசந்து”

“மக்கள்”

“மக்கள்”















